உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

‘நீதிக்காக சர்வதேச சமூகத்தை தலையிட கோரி ஆர்ப்பாட்டம்’

நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

‘சிங்கள பௌத்த நலன்களுக்குள் எமக்கான நீதி புதைக்கப்பட்டுவிட்டதா?’, ‘எமது உறவுகளே எமக்கு வேண்டும்’, ‘பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உரிமைக்குரல் அடக்கப்படுவது ஐ.நா.வே உனக்கு தெரியாதா?’, ‘சிங்கள இராணுவமே எங்களது உறவுகள் எங்கே?’ போன்ற கேள்விகள் அடங்கிய பதாதைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

இதேவேளை தாம் கைவிடப்பட்ட நிலையை உணர்வதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க