உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வுகளுக்கான காலம் நீடிப்பு

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரச துறை ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் அமர்வுகளுக்கான கால அவகாசம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் ஜூலை 18 ம் திகதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் , ஜனாதிபதி வழங்கிய அனுமதிக்கமைய அதன் காலம் அக்டோபர் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க