உள்நாட்டு செய்திகள்

1949 முதல் 2019 வரை 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைப்பு!

” இலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் திரட்டியது.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்குமிடையில் நேற்று (11) பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை? இரு தலைவர்களும் நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.1949 இல் இருந்து இற்றைவரை அரசாங்கங்களுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்.” என்றார்.

 

கருத்து தெரிவிக்க