உள்நாட்டு செய்திகள்வடக்கு செய்திகள்

நானாட்டான் பிரதேச சபைக்கான வெள்ளிப்பதக்கம் கையளிப்பு

வடமாகாண ரீதியில் உள்ள 34 உள்ளுராட்சி மன்றங்களில் வினைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்கு தேசிய ரீதியில் வெள்ளிப்பதக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது.

குறித்த விருது மற்றும் சான்றிதழ்களை வைபவரீதியாக நானாட்டன் பிரதேச சபையின் தவிசாளரிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று நனாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்றது.

நாடாளுமன்ற அரச கணக்கு குழுவினால் கடந்த 2017ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அரச அலுவலகங்கள் நிதி கோட்பாடுகளுக்கு இணங்குதலுக்கான மதிப்பீட்டு செயற்பாட்டில் வினைத்திறனாக செயற்பட்டமைக்காக வடமாகாணத்தின் 12 அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு ஜனாதிபதியால் கடந்த வாரம் தங்க பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் வடமாகாண ரீதியில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களில் விணைத்திறனாகவும் சிறப்பாகவும் செயற்பட்டமைக்காக நானாட்டான் பிரதேச சபைக்கு தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் கிடைக்கப் பெற்றது.

குறித்த நிகழ்வில் நானாட்டன் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, நானாட்டான் பிரதேச சபையின் செயலாளர் ஜோகேஸ்வரம் உற்பட நானாட்டன் பிரதேச சபை உப தலைவர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்து தெரிவிக்க