உள்நாட்டு செய்திகள்புதியவை

வறட்சியால் 565,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 565,000 க்கும் அதிகமாக உள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மையம் இன்று தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, வட மேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 18 மாவட்டங்களில் வறட்சி பாதித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மையம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1300 பவுசர்கள் மற்றும் 800 நீர் தொட்டிகளை இந்த பகுதிகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீர் தொட்டிகள் அல்லது போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரை வழங்குவதன் மூலம் பொது மக்களும் உதவ முடியும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு பங்களிப்பு செய்ய விரும்புவோர் அனர்த்த முகாமைத்துவ மையத்தை 117/112 136 136/112 136 222/112 670 002 இலக்கங்களூடாக தொடர்பு கொள்ள முடியும் என மையம் குறிப்பிட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க