உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

கிணறு அமைக்கும் திட்டம் பிரதேச சபையில் ஒத்திவைப்பு

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய உறுப்பினர் சத்தியசுதர்சனால் கொண்டுவரப்படட கிணறு அமைக்கும் திட்ட யோசனை அடுத்த அமர்வில் தீர்மானிப்பதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அமர்வு தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன் போது வறட்சி நிலையை கருத்தில் கொண்டு புதுகுடியிருப்பு சபைக்கு உட்பட்ட 12 வட்டாரங்களிலும் பொதுக்கிணறு அமைப்பதோடு சபை எல்லை பகுதிக்குள் உள்ள திருத்தப்படாத குழாய்க் கிணறுகளை திருத்தும் திட்டத்தை உறுப்பினர் சத்தியசுதர்சன் முன் வைத்தார்.

இது சபையினால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரதேச சபை தவிசாளர் இது தொடர்பில் ஆராய வேண்டும் என தெரிவித்தார்.

பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அடுத்த அமர்வில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அது தொடர்பில் அடுத்த அமர்வில் ஆராயப்படும் என தெரிவித்து பிரதேச சபை தவிசாளர் கூட்டத்தை நிறைவு செய்தார்

கருத்து தெரிவிக்க