உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் கடும் காற்று – வீடுகள் சேதம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று மாலை வீசிய கடும் காற்று காரணமாக வீடுகள் பல பகுதியளவில் சேதமடைந்துள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக கடும் வறட்சியும் வெப்பமும் நிலவி வந்த நிலையில் இன்று சில இடங்களில் மழை பெய்தது

இந்நிலையில் இன்று மாலை நான்கு 30 மணியளவில் மாங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீதிகளில் வீதியோரங்களில் நின்ற மரங்கள் பல முறிந்து விழுந்து வீதியில் போக்குவரத்து தடைபட்டது அத்தோடு மக்களுடைய வாழ்விடங்களில் பயன்தரு மரங்கள் பலவும் நாசமாகியுள்ளன

அத்தோடு மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 9 வீடுகளும் தச்சடம்பன் பகுதியில் ஒரு வீடும் புலுமச்சிநாதகுளம் பகுதியில் ஒரு வீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த அகிலன் மாங்குளம் கிராம அலுவலர் தனபால்ராஜ் அம்பகாமம் பதில் கிராம அலுவலர் ரஞ்சிதகுமார் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் மு முகுந்தகஜன் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்

கருத்து தெரிவிக்க