உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியா தொடரூந்து விபத்தில் இளைஞன் படுகாயம்

வவுனியா புளியங்குளம் புகையிரதக்கடவையில் இன்று பிற்பகல் கடுகதி தொடரூந்துடன் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி தொடரூந்துடன், புதூர் ஆலயத்திலிருந்து பிரதான வீதிக்குச் உந்துருளியில் செல்ல முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலகநாதன் நர்மதன் வயது 18 புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த புதூர் பகுதியில் கடந்த வருடமும் இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இரு இளைஞர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க