உள்நாட்டு செய்திகள்புதியவை

பயங்கரவாத தாக்குதல்: 500 மில்லியன் நட்டஈடு கோரி மனு

ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாத தாக்குதலின் போது காயமடைந்த சட்டத்தரணி ஒருவர் ரூ .500 மில்லியன் இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்துள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதக் குழுவினரால் இலக்கு வைக்கப்பட்ட இடங்களில் ஒன்றான ஷங்க்ரி-லா விடுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது சட்டத்தரணியான
மோடித்த ஏகநாயக்க காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நட்டஈடு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

காவல்துறைமா அதிபர் முத்தரப்பு தளபதிகள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ உட்பட 41 பேர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

வெடிப்பில்   தீக்காயங்கள் ஏற்பட்டதன்
காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்தார்.

அதன்படி, தாக்குதலைத் தடுக்கத் தவறியதால், அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மீறியதாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க