உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மன்னார் வைத்தியசாலை நோயாளர்களை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை மாலை நேரங்களில் பார்வையிடும் நேரம் இன்று மாலை முதல் நடை முறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா தெரிவித்தார்.

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில், நாட்டின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தங்கியுள்ள நோயளர்களை மாலை நேரங்களில் பார்வையிடுவதற்கான நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களை பார்வையிட வரும் உறவினர்களின் நலனை கருத்தில் கொண்டு மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிவரை பார்வையிட தற்காலிக அனுமதி வழங்கப்பட்டது.

நாட்டில் தற்போது இயல்பு நிலை ஏற்பட்டுள்ள நிலையில், மாலை நேரத்தில் வழமையாக நோயளர்களை பார்வையிடும் நேரமாக மாலை 5 மணி முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று புதன் கிழமை (10) மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகளில் தங்கி இருப்பவர்களை உறவினர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை பார்வையிட முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி செந்தூர் பதிராஜா தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க