உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்திய 263 பேர் கைது

கடந்த 24 மணி நேரத்தில் போதையில் வாகனம் செலுத்திய 263 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று (ஜூலை 10) தெரிவித்தனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இந்த கைதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன .

போதையில் வாகனம் செலுத்துவோரை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு மாத விசேட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஜூலை 5 ஆம் திகதி  ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் இதுவரை 1763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க