உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

லொறி மோதி சிறுவன் பலத்த காயம்

நோர்வூட், சாமிமலை மானெலி தோட்டபகுதியில் இருந்து மரக்கன்றுகளை ஏற்றி வந்த லொறி ஒன்றில் 14 வயதுடைய சிறுவன் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளாகி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் காவல்துறை தெரிவித்தனர்.

இந்த விபத்து  செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

சாமிமலை அட்டன் பிரதான வீதியின் மானெலி பகுதியில் வீதி ஒரமாக விளையாடி கொண்டிருந்த குறித்த சிறுவன் மீது மானெலி தோட்டபகுதியில் இருந்து லிந்துலை பகுதியை நோக்கி பயணித்து கொண்டிருந்த லொறியே இவ்வாறு  மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பலத்த காயங்களுக்குள்ளான குறித்த சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பில் கைது செய்யபட்ட சாரதியை இன்று அட்டன் நீதவான் நீதிமன்றில்  முன்னிலைபடுத்தபடவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

குறித்த லொறியினை பொலிஸார் கைபற்றியுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

கருத்து தெரிவிக்க