உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காவல்துறை அதிபர்,பாதுகாப்பு முன்னாள் செயலாளருக்கு பிணை அனுமதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்கூட்டியே தடுக்க தவறினர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் காவல்துறை அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோர் இன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இவர்களை தலா 5இலட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தது.

இவர்கள் இருவரும் கடந்த ஜூலை 2ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க