உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

விக்டர் சமரவீர எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ரத்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 19ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் உத்தரவிட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் விக்டர் சமரவீர நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டார்.

எவன் கார்ட் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளவர்களை கைது செய்வதற்கு அண்மையில் சட்டமா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

கருத்து தெரிவிக்க