உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

SAVE THE CHILDREN நிறுவனத்தின் மூலம் சுகாதார வீதி நாடகம்

SAVE THE CHILDREN நிறுவனத்தின் அனுசரணையுடன் மஸ்கெலிய சாமிமலை டீசைட் தோட்டத்தில் இன்று காலை வீதி நாடகம் ஓன்று இடமபெற்றது .

பெருந்தோட்ட பகுதிகளில் மூடநம்பிக்கையை ஒழித்து சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடிப்பது தொடர்பில் இந்த வீதி நாடகம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்விற்கு தோட்ட நிர்வாகமும் தோட்ட சுகாதார உத்தியோகஸ்த்தர்களும் தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

இந்த நிகழ்வில் டீசைட் தோட்ட தொழிலாளர்களும் வெளிக்கல உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

பெருந்தோட்ட பகுதிகளில் மூடநம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வீதி நாடகங்கள் மற்றும் தெளிவூட்டல்கள் போன்ற நடவடிக்கைகளையும் குறத்த நிறுவனம் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது .

கருத்து தெரிவிக்க