உள்நாட்டு செய்திகள்

லாவோஸ் பிரஜை ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது!

சுமார் நான்கு கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் லாவோஸ் நாட்டின் பிரஜையொருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், அவரிடமிருந்து 2.63 கிலோகிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேக நபர் விசாரணைகளுக்காக விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க