உள்நாட்டு செய்திகள்புதியவை

போதையில் வாகனம் செலுத்திய 363 சாரதிகள் கைது

நேற்றிரவு நடத்தப்பட்ட விசேட நடவடிக்கையின் போது போதையில் வாகனம் செலுத்திய 360 க்கும் மேற்பட்ட சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் 363 சாரதிகள் போதையுடன் வாகனம் செலுத்தியதன் காரணமாக கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போதையுடன் வாகனம் செலுத்துவோரை கட்டுப்படுத்தும் ஒரு மாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க