உள்நாட்டு செய்திகள்புதியவை

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும்: மஹிந்த அமரவீர

தேவை ஏற்பட்டால் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிடும் என அந்த்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்னுமொரு தரப்பினருக்கு பின்னால் செல்ல வேண்டிய தேவை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுனவுக்கு அவசியமில்லையாயின் தொடர்ந்தும் இரு தரப்புக்குமிடையிலான கலந்துரையாடல்கள் அவசியமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுன இணைந்து ஸ்ரீலங்கா நிதஹஸ் பொதுஜன பெறமுன என்ற கூட்டணியை அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க