உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

வட மாகாண தடகளப் போட்டியில் எஸ்.சஞ்சீவனுக்கு முதலிடம்

2019ஆம் ஆண்டிற்கான வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள போட்டியில் 2ஆம் நாள் போட்டி நேற்று இடம்பெற்றது.

இதில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 5000m ஓட்டப்போட்டியில் வவுனியாவின் கிராமபுர பாடசாலையான வவுனியா கந்தபுரம் வாணி வித்தியாலயத்தின் மாணவன் செல்வன் எஸ்.சஞ்சீவன் முதலாம் இடத்தைபெற்று தங்கப்பதக்கத்தை சுவிகரித்துக்கொண்டுள்ளார்.

இவர் இத்தூரத்தினை 17நிமிடம்.7செக்கனில் ஓடிமுடித்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.

பின்தங்கிய பாடசாலையில் வறிய குடும்பத்தில் பிறந்த இந்த மாணவன், தொடர் பயிற்சியினாலும் உடற்கல்வி ஆசிரியரினால் வழங்கப்பட்ட பயிற்சியனாலும் அதிபர் ஆசிரியரகளின் ஒத்துழைப்புடனும் தான் இந்த வெற்றியை பெற்றதாக கூறினார்.

இவ்வெற்றியானது அவரது பாடசாலைக்கு பல வருடங்களுக்கு பின் கிடைத்த வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க