வடக்கு செய்திகள்

கரைச்சி பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர் நியமனம்

கரைச்சி பிரதேச சபையில் தமிழர் விடுதலைக்கூட்டனியின் சார்பில் தெரிவான உறுப்பினர் ஒருவர் சுயவிருப்பின் பேரில் பதவி விலகியுள்ள நிலையில், குறித்த வெற்றிடத்திற்கான புதிய உறுப்பினர் ஒருவர் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கரைச்சி பிரதேச சபையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் உறுப்பினர் புவிதரன் என்பவர் தனது சுய விருப்பின் பேரில் பதவி விலகியுள்ள நிலையில் அந்த இடத்திற்கு அம்பாள்குளத்தை சேர்ந்த ஓய்வு நிலை கிராம அலுவலர் கந்தையா தர்மலிங்கம் அவர்கள் புதிதாக கட்சியினால் உறுப்பினராக நியமிக்கபப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ள சபை அமர்வில் கலந்துகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான ஏற்பாடுகள் பிரதேச சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த உறுப்பினருக்கு சபை கடிதம் ஒன்றின் ஊடாக அனுப்பி வைத்துள்ளது.

கருத்து தெரிவிக்க