உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

கொத்மலையில் நேற்றிரவு நடந்தது என்ன? 18 பேர் கைது!

கொத்மலை புளும் பீல்ட் தனியார் தோட்டத்தில், தோட்ட முகாமையாளர் ,  உத்தியோகத்தர்கள்மீது நேற்றிரவு (05) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வாகனம் உட்பட சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன  என்று காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளும் பீல்ட் தோட்டத்தில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊழியர் நம்பிக்கை நிதி, ஊழியர் சேமலாப நிதி ஆகியன இன்னும் செலுத்தப்படவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (05) மதியம் தொழிலாளர்கள், தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டே தொழிலாளர்கள் சிலர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் தோட்ட முகாமையாளரின் விடுதிகள் இரண்டுக்கும், வாகனங்கள் இரண்டுக்கும், கட்டடங்கள் சிலவற்றிருக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

க.கிஷாந்தன்

கருத்து தெரிவிக்க