உள்நாட்டு செய்திகள்புதியவை

இறக்குமதி செய்யப்படும் பால் மா தொடர்பில் தெளிவு வேண்டும்!

இறக்குமதி செய்யப்படும் பால் மா தொடர்பில் தெளிவான கருத்தொன்றை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டும் என நோயாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசியல்வாதிகளினால் வெளிநாட்டு ஆய்வு கூடங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டதாக கூறப்படும் பால் மா மாதிரிகள் குறித்த பரிசோதனை அறிக்கை பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் அந்த அமைப்பின் செயலாளர் தம்மிக எதிரிசிங்க கூறியுள்ளார்.

இறக்குதி செய்யப்படும் பால் மா பிரச்சினை தொடர்பில் ஏற்றுக் கொள்ளத் தக்க தீர்வொன்றை அரசாங்கமோ அல்லது அது தொடர்பான அமைப்புக்களோ இதுவரையில் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மா நிறுவனங்களினால் மறைக்கப்பட்டு வரும் உண்மையை மக்களுக்கு தெளிவுபடுத்துவது பொறுப்பான அரசாங்கத்தின் கடப்பாடாகும் எனவும் தம்மிக எதிரிசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க