உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்புதியவை

காவல்துறையினரிடம் இருந்து பறித்து செல்லப்பட்ட துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு புதூர் பகுதியில் நேற்று மாலை காவல்துறையினரைத் தாக்கி விட்டு பறித்துச் செல்லப்பட்ட கைத்துப்பாக்கி வீதியோரத்தில் கைவிடப்பட்டநிலையில் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய்களின் உதவியுடன் குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இணைந்து காவல்துறையினரும் படையினரும் தொடர்ந்தும் சந்தேக நபர்களைத் தேடிவருகின்றனர்.

நேற்று குறித்த கைத்துப்பாக்கியை காவல்துறையினரிடம் இருந்து சிலநபர்கள் பறித்துச்சென்றிருந்தனர்.

இதுதொடர்பாக சந்தேகத்தின்பேரில் சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க