உள்நாட்டு செய்திகள்புதியவை

மாகந்துரே மதூஷுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு தொடர்பு!

மாகந்துரே மதூஷுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் தெரிவித்துள்ளார்.

மஹாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களின் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் போனமைக்கும் இதுவே காரணம் எனவும் ராஜித சுட்டிக்காட்டினார்.

மாகந்துரே மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த ஒரு பிரபலமானவருடனும் தொடர்பு பட்டதாக தெரியவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க