உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரண தண்டனைக்கு எதிரான மனு மீதான விசாரணைகள் இன்றும்!

மரண தண்டனையை அமுல்ப்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெறும் விசாரணைகளில் மேலதிக சமர்ப்பணங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில், இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் மரண தண்டனை விதிப்பது ஏற்புடையதல்ல எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர் மாலிந்த செனவிரட்னவினால் கடந்த 28 ஆம் திகதி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க