விளையாட்டு செய்திகள்

ஓய்வு அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

காயத்தால் ஷகிர் தவான், விஜய் சங்கர் விலகிய போதிலும் உலக கிண்ண போட்டியில் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் அம்பத்தி ராயுடு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அம்பத்தி ராயுடு முன்னதாக தேர்வு செய்யப்படவில்லை. அவருக்கு பதிலாக விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது. அதற்கு அம்பத்தி ராயுடு வெளிப்படையாக தனது ஆதங்கத்தை தெரிவித்து இருந்தார்.

ஷிகர் தவான், விஜய் சங்கர் ஆகியோர் காயம் காரணமாக உலக கிண்ண போட்டியில் இருந்து விலகிய போதிலும் மாற்று வீரர் பட்டியலில் வைக்கப்பட்டு இருக்கும் அம்பத்தி ராயுடுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

ரிஷாப் பண்ட், மயங்க் அகர்வால் ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உலக கிண்ண அணியில் இடம் கிடைக்காததால் அம்பத்தி ராயுடு அதிருப்தியில் இருந்தார்.

இந்த நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க