உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மங்களகம கிராமதிற்கான புதிய பாலம் அமைக்கும் திட்டம் இன்று ஆரம்பம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரேயோரு சிங்கள கிராமமான மங்களகம கிரமாத்தின் நீண்டகால தேவையாக இருந்த பாலம் கம்பெரலிய திட்டத்தின்கீழ் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான 20 இலட்சம் நிதியை முன்னாள் இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி ஒதுக்கீடு செய்துள்ளார்.

குறித்த பாலத்திற்கான அடிக்கல் நடும் வைபவம் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் சுனில் பண்ரார தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர்அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டுள்ளார்.

மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார நிமல் மங்களகம விகாராதிபதி உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த இடத்தில் பாலம் அமைக்கப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க