உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நோர்வுட் பிரதேசசபை இடம் மாற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

நோர்வுட் பிரதேசசபையினை டிக்கோயா புளியாவத்தை நகரில் இருந்து பொகவந்தலாவை டின்சின் நகர கலாசாலை மண்டபத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளுக்கு பொறுப்பான பிரதி ஆனையாளர் வீதுரசம்பத் இதனைத் தெரிவித்துள்ளார்.

நோர்வுட்பிரதேசசபையானது பொகவந்தலாவ டின்சின் நகர பகுதியில் உள்ள சௌமியபாவான் மண்டபத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.

நோர்வுட் பிரதேசசபை சபையில் ஒரு பிரேரனையை கொண்டு வந்து அந்த பிரேரனையை அனைத்து உறுப்பினர்களும் ஏற்கொண்டதன் பின்னரே அதன் பிரதான காரியாலயம் எந்த இடத்தில் அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும்.

இது தொடர்பில் விசாரனைகளை மேற்கொண்டு கிடைக்க பெறுகின்ற தகவலுக்கு அமைய குறித்த சபை பொகவந்தலாவ டின்சின நகரில் வைக்கபடுமா அல்லது இருந்த இடத்திற்கு மாற்றபடுமா என்பதனை தீர்மானிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க