உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பிரதமரினால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கே எனது ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கு தனது ஒத்துழைப்பை வழங்குவதாக பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

பதுளை பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் ​போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் நிரபராதிகளாயின் மீண்டும் அவர்களுக்கு பதவிகளை வழங்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் இன மத வேறுபாட்டில் செயற்படுவதில்லை எனவும் அனைவரும் ஒன்றாக முன்னோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க