உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

நாவலப்பிட்டி விபத்தில் சிக்கிய 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ஹப்புகஸ்தலாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்து விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முதலாம் மற்றும் 03ஆம் தரங்களில் கற்கின்ற மாணவர்கள் 08 பேர் குறித்த முக்கச்சர வண்டியில் பயணம் செய்திருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உட்பட 09 பேரும் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்திவருகின்றனர்.

 

கருத்து தெரிவிக்க