வெளிநாட்டு செய்திகள்

கென்யாவைச் சேர்ந்தவர் விமானத்திலிருந்து தவறி விழுந்து மரணம் :

கென்யாவின் நைரோபி நகரில் இருந்து அந்நாட்டின் எயாவேஸ்  நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் லண்டன் வான் பரப்பிற்குள் பறந்து கொண்டிருந்த போது, பயணி ஒருவர் கிளாபம் பகுதியில் ஒரு வீட்டின் தோட்டத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தோட்டத்தில் ஒருவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து,  வீட்டின் உரிமையாளர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார்.

விமானத்தின் தரை இறங்கும் கியர் பெட்டியில் ஒரு பை. தண்ணீர் போத்தல்,  மற்றும் உணவைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயணி அங்கு ஒளிந்து கொண்டு நடுவானில் விமானம் பறக்கும் போது விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து விமானத்திலிருந்து தவறி விழுந்த பயணியை அடையாளம் காண உதவுமாறு கென்யாவின் உயர் அதிகாரிகளை லண்டன் காவற்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க