உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘அமைச்சரவையில் நாளை அனல் பறக்கும்’

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நாளை (01) நடைபெறவுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு ‘டெப்’ கணினிகளை வழங்குத் திட்டம், மரண தண்டனை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா கொடுப்பனவு விவகாரம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் இதன்போது சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களும், அமைச்சரவை அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

கருத்து தெரிவிக்க