உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று மாலை 3 மணி முதல் 4 மணிவரையான ஒரு மணி நேரம் பேருந்து நிலையம் முன்பாக இப்போராட்டம் நடைபெற்றது.

இதன் போது அரசியற் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் தமிழர்களைக் கொல்லாதே, சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற விடயங்களை கோஷங்களாக எழுப்பியம் பதாகைகளில் தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், அக்கட்சியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி க.சுகாஷ், கட்சியின் மகளீர் அணித் தலைவி உட்பட கட்சியின் உறுப்பினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க