உள்நாட்டு செய்திகள்புதியவை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது: கல்முனையில் சம்பவம்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முகப்பு சுற்றுச்சூழலை தொலைபேசியில் பதிவு செய்ததோடு சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவுசெய்த நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு ஊழியர்கள் அது தொடர்பாக கேட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர் சந்தேகத்திற்கிடமாக பதிலளித்தமையினால் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்திற்கு பாதுகாப்பு ஊழியர்கள் எடுத்து சென்றனர்.

உடனடியாக கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய காணொளி எடுத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலைய எல்லையில் வதியும் 40 வயதுடைய முஹம்மட் இஸ்மாயில் முகம்மட் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் ஏற்கனவே குறித்த வைத்தியசாலையில் கட்டட ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் எஞ்சி இருந்த பொருட்களை நிறுவன முகாமையாளருக்கு அடையாளம் காட்டுவதற்காக காணொளியை பதிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் கூறுவதில் உண்மை இல்லையென வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க