உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கியுடன் மூவர் கைது

வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி ஒன்றுடன் மூவரை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கிரான்பாஸ், ஜோர்ஜ் பெரேரா மாவத்தையில் நேற்று மாலை 2.30 மணியளவில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொகரெல்ல, இப்பாகமுவ மற்றும் கொழும்பு 14 பகுதிகளை சேர்ந்த 21,31 மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க