உள்நாட்டு செய்திகள்புதியவை

அக்குரஸ்ஸயில் 3 மில்லியன் கொள்ளை: இருவர் கைது

நிறுவனம் ஒன்றில்  சுமார் ரூ .3 மில்லியன் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2 மணியளவில் அக்குரஸ்ஸ பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் இருந்து சந்தேக நபர்கள் ரூ .2.9 மில்லியனைக் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.

குறித்த நபர்கள் குற்றம் நடந்த இடத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கருத்து தெரிவிக்க