விளையாட்டு செய்திகள்

தொடரில் இந்தியா முதல் தோல்வி-விளக்கும் கோலி

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது.

இங்கிலாந்து அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இது குறித்து இந்திய அணியின் தலைவர் விராட் கோலி விளக்கமளித்துள்ளார்:

‘இங்கிலாந்து உடனான போட்டியில், நாணய சுழற்சி மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. மேலும் முக்கியமாக 4 ஓட்டத்தின் அளவு மிகவும் குறைவாக இருந்தது. உலக கிண்ணத்தில் மிகவும் குறைந்த அளவான 59 மீட்டர் தூரம் மட்டுமே பவுண்டரி இருந்தது.

இதுபோன்ற சூழலை இந்திய அணி எதிர்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதுதான் தோல்விக்கான மிக முக்கிய காரணம்.

மேலும் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்களது திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக போராடினார்கள்.

ஒவ்வொரு அணியும், ஒரு கட்டத்தில் தோல்வியை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கிரிக்கெட் வீரர்களான நாங்கள், இவற்றை கடந்துதான் ஆக வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும்.

இந்த போட்டி குறித்து அணி வீரர்களுடன் கலந்து பேசி அடுத்த போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என நிச்சயம் ஆலோசிக்க வேண்டும்’ என அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க