வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க மணல் சிற்ப சம்பியன்ஷிப் போட்டியில் சுதர்சன் பட்நாயக்

அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப சம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி நகரை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி வருகிறார்.

இவரது பெரும்பாலான ஓவியங்கள் சமூக விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் அமைந்திருக்கும்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த சர்வதேச மணற்சிற்ப போட்டியில் சுதர்சன் பட்நாயக் தங்கப் பதக்கத்தை வென்று அவரது தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க