உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6 ம் திகதி வருடாந்த பொங்கல் விழா

பழைய செம்மலை நீரவிப்பிட்டி பிள்ளையார் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ளும் இந்து மத மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என பளத்த மதகுரு ஒருவர் வர்ணித்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் நாடாத்திய ஊடகவியளாலர் சந்த்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை நிலைமை காரணமாக 2009 ஆம் ஆண்டு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள முடியாதவாறு இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்பொழுது அவ்விடத்தில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ள நிலையில் நாங்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று வழிபடுகளை மேற்கொண்டுவருகின்றோம்.

குறித்த பகுதியில் தங்கியுள்ள பௌத்த மதகுரு ஒருவர் எங்களுடைய வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்திவருகின்றார்.

மேலும் இந்த ஆலய வழிபாட்டிற்கு இந்து மக்களை அவர் பயங்கரவாதிகளாக வர்ணித்து சிங்கள மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார் இது எங்களுக்கு மிக வேதனையாக உள்ளது என மேலும் தெரிவித்துள்ளனர்.

செம்மலை கிராம மக்களும் அயல் கிராம மக்களும் இனைந்து ஆரம்பகாலம் தொட்டு இந்த கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் 6 ம் திகதி வருடாந்த பொங்கல் உட்சவம் சிறப்புற இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டு பொங்கல் பொங்கி மடை பரவி உட்சவம் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

விசேடமாக அன்றைய தினம் 108 பொங்கல் பானை வைத்து பொங்கல் உட்சவம் நடத்தப்படவுள்ளதாக மேலும் ஊடகவியளாலர் சந்த்திப்பில்அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க