உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்

நானுஓயா நகரில் போதை பொருள் ஒழிப்பு ஊர்வலம்

போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும் இன்று நானுஓயா நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நானுஓயா பகுதியை சேர்ந்த தமிழ், சிங்கள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பதாதைகளை ஏந்தி நகரில் ஊர்வலமாகசென்றதுடன் வீதி நாடகமும் இடம்பெற்றுள்ளது.

போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் அல்லது பாதிப்புகள் அதனை தடை செய்வதற்கு மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் இந்த வீதி நாடகத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர் என்றும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க