உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

21/4 தாக்குதல் – தெரிவுக்குழுவின் பணி இம்மாதத்துக்குள் நிறைவு!

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகள் இம்மாதத்துக்குள் நிறைவுக்குவரும் என தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமார சிறி தெரிவித்தார்.

அத்துடன், சாட்சியங்களை பதிவுசெய்யும் நடவடிக்கை நிறைவடைந்ததும், அறிக்கை தயாரிக்கும் செயற்பாடு ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது ஆஜராகுமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளபோதிலும் அதை அவர் நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க