விளையாட்டு செய்திகள்

மேற்கிந்தியாவை வென்று ஆறுதல் அளிக்குமா இலங்கை ?

செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் இன்று நடைபெறும் 39-வது உலக கிண்ண லீக் ஆட்டத்தில், இலங்கை- மேற்கிந்திய அணிகள் இன்று மோத உள்ளன.

இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இவ்விரு அணிகளும் உலக கிண்ண கிரிக்கெட்டில் 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து அதில் 2-ல் இலங்கையும், 4-ல் மேற்கிந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

இதேவேளை  இந்தியா உடனான நேற்றைய போட்டியில் இங்கிலாந்து வெற்றியடைந்த நிலையில் இலங்கைக்கான உலக கிண்ண கனவு வாய்ப்பு நழுவியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இலங்கை அணி ஓட்ட சராசரியில் தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணியை விட அதிகரித்த புள்ளிகளை பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கான கனவு ஓரளவுக்கு சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க