உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

புதுக்குடியிருப்பில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம்

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாளான இன்று போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டம் இன்று புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் இன்று போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், பிரதேச சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பன இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பேரணி புதுக்குடியிருப்பு போலீஸ் நிலையத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நகர் வரை இடம்பெற்றுள்ளது.

இதன்போது போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதோடு போதை பொருள் பாவனைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றுள்ளது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் உள்ளிடட பிரதேச செயலக அதிகாரிகள் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க