உள்நாட்டு செய்திகள்

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியையும் தெரிவுக்குழு அழைக்குமா?

” இலங்கையின் பாதுகாப்பு  படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவுக்கு அழைப்பாணை விடுப்பதற்கு இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை.”

-இவ்வாறு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரான பிரதி சபாநாயகர் ஆனந்த குமார சிறி தெரிவித்தார்.

21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதுகாப்பு துறைகளின் முக்கியஸ்தர்களையும் அழைத்து விசாரணை நடத்திவருகின்றது.

எனவே, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரிக்கும் அழைப்பு விடுக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அடுத்த அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதன்போது சாட்சியமளிக்கவருமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

கருத்து தெரிவிக்க