விளையாட்டு செய்திகள்

இலங்கை அணியின் கலைந்து போன உலகக் கிண்ண கனவு

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி தற்போது ஓரளவுக்கு இழந்துள்ளதுள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இந்த இரண்டு புள்ளிகளுடன் மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று 4ஆம் இடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பையும் இங்கிலாந்து அதிகரித்துள்ளது. முன்னதாக, அரையிறுதிப் போட்டிக்கான தகுதியை அவுஸ்ரேலியா, இந்தியா, நியூசிலாந்து போன்ற அணிகள் தக்கவைத்துள்ளன.

இந்தநிலையில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீதமுள்ள ஒரு போட்டியிலும் பங்களாதேஷ் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்திக்க வேண்டும்.

அத்தோடு, இலங்கை அணி ஓட்ட சராசரியில் தற்போதைய நிலையில் இங்கிலாந்து அணியை விட அதிகரித்த புள்ளிகளை பெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கான கனவு ஓரளவுக்கு சாத்தியமாகும்.

கருத்து தெரிவிக்க