உள்நாட்டு செய்திகள்புதியவை

அரசாங்கம் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பதாக குற்றச்சாட்டு!

அம்பாந்தொட்டை மாவட்டதில் 6500 ஏக்கர் காணிகளை வெளிநாடுகளுக்கு விற்க அரசாங்கம் தயாராகி வருவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.

அம்பாந்தொட்டை மயுரபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்த சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, நாட்டின் பாரம்பரிய நிலங்களையும் வியாபார நிலையங்களையும் வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக மக்களுடன் பாதையில் இறங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க