உள்நாட்டு செய்திகள்புதியவை

டக்ளஸ், தொண்டா, அதாவுல்லாவுக்கு உபதலைவர் பதவி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, பாரிய அரசியல் கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதன்படி மலரவுள்ள புதிய கூட்டணியில் நான்கு உப தலைவர் பதவிகள் உருவாக்கப்படவுள்ளன என்றும், இனத்துவ அடிப்படையில் அதற்கான நியமனம் வழங்கப்படும் என்றும் தெரியவருகின்றது.

அந்தவகையில் ;ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா ஆகியோர் உப தலைவர்களாக தெரிவு செய்யப்படுவார்கள் என அறியமுடிகின்றது.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாடு ஆகஸ்ட் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பதவிகள் பகிரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

கருத்து தெரிவிக்க