வெளிநாட்டு செய்திகள்

கந்தகார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் கந்தகாரில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பில் 8 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த kiவெடிகுண்டு தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் நடத்தியுள்ளதாகவும் , 4 மனித வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிசார் தெரிவித்தனர். மேலும் அந்நாட்டு பொலிஸ்மா அதிபர் ததீன்கான் , “பாதுகாப்பு படையினர் இந்த தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க சிறப்பு தூதரின் 7 வது சுற்று அமைதிப் பேச்சு நடக்க இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ” என்றார். கடந்த 19 ஆண்டுகளாக தலிபான்கள் இந்த போரை நடத்தி  வருவது குறிப்பிடத் தக்கது.

கருத்து தெரிவிக்க