உள்நாட்டு செய்திகள்புதியவை

புற்றுநோய் மருந்து இறக்குமதியில் முறைகேடுகள் – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

புற்றுநோய்க்கான மருந்து இறக்குமதியின் போது இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் நாளை திங்கட்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழு மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் வசந்த திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன், தனியார் ஔடத சங்கங்களின் உயர்மட்ட அதிகாரிகளை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க