உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு ஆரம்பம்!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராஜா தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந்த மாநாட்டில்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

தந்தை செல்வா நினைவிடத்தில் அஞ்சலி!

யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க